×

பாம்பு கடித்து மூதாட்டி பலி

பேரையூர், செப். 3: சேடபட்டி அருகேயுள்ள கம்மாளபட்டியை சேர்ந்த அச்சுமுனியாண்டி மனைவி வனப்பேச்சி (90). சம்பவத்தன்று இவர் தனது வீட்டருகேயுள்ள வேப்பமரத்தடியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது நல்லபாம்பு ஒன்று இவரது காலின் கட்டை விரலில் கடித்து விட்டது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வனப்பேச்சி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பாம்பு கடித்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Achumuniandi ,Vanapechi ,Kammalapatti ,Chedapatti ,
× RELATED திருமங்கலம் அருகே ஓடும் வேனில் திடீர் தீ: பொருட்கள் எரிந்து நாசம்