×

திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு!

திருவள்ளூர்: திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் பவித்ரா முன்பு ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு பெற்றது. சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011ம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையரை கடந்த 28ம் தேதி நேரில் சந்தித்த நடிகை விஜயலட்சுமி, சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், தன் மீது வீண் பழி சுமத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது விஜயலட்சுமி புகார் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய சீமான்; தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது. விசாரித்து என் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கட்டும். குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை, எங்கும் ஓடி ஒளியவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில், திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் பவித்ரா முன்பு ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு நிறைவடைந்தது. சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் இரண்டரை மணி நேரமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நேற்று விசாரணை நடத்தி விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தன்னுடன் சீமான் மாலை மாற்றி திருமணம் செய்ததாக விஜயலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிமுக ஆட்சி காப்பாற்றியதாகவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டியிருந்தார். தன்னை நீதிமன்றம் செல்லவிடாமல் சீமான் தடுத்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். சீமான் தன்னுடன் வாழ்ந்தபோது 7 முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதியப்பட்டிருந்தது.

65 லட்சம் ரூபாய் ரொக்கம், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும் சீமான் அபகரித்துக் கொண்டதாக விஜயலட்சுமி புகாரில் பதிவிட்டுள்ளார். புகார் பற்றி ராமாபுரம் காவல் நிலையத்தில் காவல் துணை ஆணையர் உமையாள் நேற்று விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியிருந்தார். சுமார் 8 மணி நேரம் நீடித்த விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பணப் பரிமாற்றம் உள்ளிட்ட ஆதாரங்களை விஜயலட்சுமி அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Women's Court ,Ajarananan ,Vijayalakshmi ,Thiruvallur ,Pavitra ,Ajarana ,Seaman ,Ajaran ,Vijayalaksha ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!