×

இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் சட்டவிதிக்கு மாறாக செயல்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இடதுசாரி இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரனூரில் உள்ள சுங்கச்சாவடி, தொழுப்பேடு சுங்கச்சாவடியிலிருந்து விதிகளுக்கு மாறாக 60 கிலோ மீட்டருக்குள் உள்ளாகவே அமைந்துள்ளது.

இதனை அகற்றக்கோரி தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ஒன்றிய தணிக்கை துறை அறிக்கையிலேயே சட்ட விரோதமாக ரூ.28 கோடி வசூலித்துள்ளதாக ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அப்பாவி வாகன ஓட்டிகள் பல ஆயிரம் பேரிடமிருந்து சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசுஉடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Paranur Tollbooth ,National Highways Authority ,Union Government ,Left-wing Movements Demonstration ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து...