×

நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி தனது நண்பர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாவனி செட்டி என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகிளா நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி யாஷிகா ஆனந்தை வரும் 03-05-2024 அன்று ஆஜராக உத்தரவிட்டார்.

The post நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Yashika Anand ,Chengalpattu District Mahila Court ,Chengalpattu ,Chengalpattu District Principal Sessions Court ,Puducherry ,Chennai ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!