×

தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு! கர்நாடகாவில் விடிய விடிய விவசாயிகள் போராட்டம்.. டெல்லி செல்லும் சிவக்குமார்

பெங்களூரு : தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். மாண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணை முன்பு நேற்று காலை கூடிய விவசாயிகள், தமிழ்நாட்டிற்கு காவிரியில் 5000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைமை குறித்து ஆராயாமல் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். காலையில் தொடங்கிய போராட்டம் விடிய விடிய இரவு முழுக்க நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தரசன் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டம் ஒருபுறம் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே, மற்றொரு புறம் மாண்டியா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் கைகளில் நெருப்பு பந்தங்களுடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை நிறுத்தி விட்டு கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த இன்று டெல்லி செல்வதாக கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்பாசனத்துறை அமைச்சரான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு! கர்நாடகாவில் விடிய விடிய விவசாயிகள் போராட்டம்.. டெல்லி செல்லும் சிவக்குமார் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Karnataka ,Shivakumar ,Delhi ,Bengaluru ,Mandia district ,Kaviri ,Tamil Nadu ,Kavieri ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...