×

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை கலெக்டர் பங்கேற்பு

மதுரை, ஆக. 31: மதுரை, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து, மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு ெதாடர்பான ஒத்திகை நிகழ்ச்சியை நேற்று நடத்தின. இந்நிகழ்ச்சியில் பேரிடர் மீட்பு படை கமாண்டர் செந்தில்குமார், கலெக்டர் சங்கீதா மற்றும் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது குறித்து பேரிடர் மீட்பு படை வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதுபோல் நீரில் மூழ்கியவர்களை மீட்ட பின் அவர்ளுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும், மழைக்காலம் நெருங்குவதையொட்டி பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

The post மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : National Disaster Response Force ,Vandiyur Theppakulam, Madurai ,Madurai ,Vandiyur Mariyamman ,Temple ,Theppakulam ,Vandiyur Theppakulam ,National ,Disaster Rescue Force ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை