×

சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்: தமிழர் வேட்பாளர் தர்மன் வெற்றி பெற அதிக வாய்ப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில், இந்திய வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரின் அதிபர் ஹாலிமா யாகூப்பின் பதவி காலம் வரும் 13ம் தேதி முடிகிறது. இந்நிலையில் நாட்டின் 9வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கிறது.

இந்த தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்தினம்(66),சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற காக் சோங்(75) மற்றும் டான் கின் லியான்(75) போட்டியிடுகின்றனர். இந்த 3 பேர் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நாளை அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், தர்மன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

The post சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்: தமிழர் வேட்பாளர் தர்மன் வெற்றி பெற அதிக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Presidential election ,Singapore ,Dharman ,Dharman Shanmukaratham ,
× RELATED லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற...