×

3 வயது குழந்தையின் தாய் தற்கொலை முயற்சி

 

மல்லூர், ஆக.28: மல்லூர் அடுத்த அக்ராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கலைச்செல்வி (23). இவர்களுக்கு திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். இதனால், கலைச்செல்வி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான கோபால்(33) என்பவருக்கும், கலைச்செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதனிடையே, தன்னை திருமணம் செய்து கொள்ள கலைச்செல்வி, கோபாலை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால், மனமுடைந்த கலைச்செல்வி, நேற்று முன்தினம் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் மல்லூர் எஸ்ஐ முருகேசன் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தார். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

 

The post 3 வயது குழந்தையின் தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Mallur ,Siva ,Akrapalayam ,Kalachelvi ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை