×

வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி

 

ஈரோடு,ஆக.27: ஈரோடு வைராபாளையம் அருகே ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று காலை இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் மிதந்து வந்த சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும், மதுபோதையில் வாய்க்காலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Kalingarayan canal ,Virapalayam ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...