×

ஆக.29 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளம் செல்லும் விமானங்களில் பயண கட்டணம் பல மடங்கு உயர்வு..!!

சென்னை: ஆக.29 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளம்செல்லும் விமானங்களில் பயண கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை, அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள், பேருந்துகளில் முன்பதிவுகள் முடிவுற்ற நிலையில் பெரும்பாலானோர் விமானங்களில் செல்கின்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் நகரங்களுக்கு செல்ல கூட்டம் அலைமோதுகிறது.

The post ஆக.29 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கேரளம் செல்லும் விமானங்களில் பயண கட்டணம் பல மடங்கு உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kerala ,eve of ,Oonam Festival ,Keralamkellu ,Onam Festival ,Oenam Festival ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு