×

மாமியாரை மிரட்டியவர் கைது

சேலம், ஆக. 26: சேலம் பெரமனூரை சேர்ந்தவர் உமாராணி (52). இவரது மகள் சரண்யா. இவருக்கும் கன்னங்குறிச்சி சக்திநகரை சேர்ந்த அருள்ஆனந்த் (41) என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அருள்ஆனந்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு வந்து சரண்யாவை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால், சரண்யா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி அருள் ஆனந்த், உமாராணியின் வீட்டுக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த உமாராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி உமாராணி அளித்த புகாரின் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து அருள்ஆனந்தை கைது செய்தனர்.

The post மாமியாரை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Umarani ,Salem Peramanur ,Saranya ,Kannangurichi ,Sakthinagar ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...