×

சூதாடிய 6 பேர் கைது

தர்மபுரி, ஆக.26: பாலக்கோடு எஸ்ஐ கோகுல் மற்றும் போலீசார், ரோந்து பணி பணியில் ஈடுபட்டிருந்தனர். தொட்டம்பட்டி மயானம் பகுதியில் சென்றபோது, அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. உடனே, அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர், பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(45), மாதேஷ்(46), மற்றொரு மாதேஷ்(32), சின்னசாமி(55), சிவசக்தி(27), லோகேஷ்(23) ஆகியோரை கைது செய்தனர்.

The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Palakodu ,SI Gokul ,Thottampatti ,Dinakaran ,
× RELATED டூவீலர்கள் மோதி பழ வியாபாரி பலி