![]()
*விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
சித்தூர் : சித்தூர் 48வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று சித்தூர் எம்எல்ஏ சீனிவாசலு குறைகளை கேட்டறிந்தார். சித்தூரில் எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு ‘வீட்டுக்கு வீடு உங்கள் அரசு’ நிகழ்ச்சியில் 48வது வார்டு பகுதியில் உள்ள வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் 175 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்து உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு கிராமமாகவும் சென்று பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்து வருகிறேன். தற்போது சித்தூர் மாநகரத்தில் 48வது வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தேன். ஏராளமான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் அனைத்து பணிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தேன்.
அதேபோல் ஏராளமானோர் வீட்டுமனை பட்டா, முதியார் உதவித்தொகை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தனர். அனைவரது கோரிக்கை மனுக்கள் மீதும் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் உன உறுதியளித்தேன். முதல்வர் ஜெகன் மோகன் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். முதல்வர் ஜெகன்மோகன் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை விட அருவிக்காத பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.
வரும் தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று 175 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்பார். இவ்வாறு அவர் பேசினார். இதில் 48வது வார்டு கவுன்சிலர் ஜெகதீஷ் உள்பட ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
The post சித்தூர் 48வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ appeared first on Dinakaran.
