×

சந்திரயான் செய்தி சேகரித்து திரும்பியபோது கேமராமேன் பலி: முதல்வர் இரங்கல் ; ரூ.5 லட்சம் நிதியுதவி

களக்காடு: சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து பேட்டி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர் குழுவினர் நேற்று முன்தினம் மாலை ஒரு காரில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். திருவனந்தபுரத்தில் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் பணிகளை முடித்து விட்டு, காரில் மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் நாங்குநேரி நான்குவழி சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அங்கும், இங்கும் ஓடி, சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தொலைக்காட்சி கேமராமேன் சங்கர் (32) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செய்தியாளர் நாகராஜன் (45), கேமரா மேன்கள் வள்ளிநாயகம் (38), நாராயணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். விபத்தில் இறந்த சங்கரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டார்.

The post சந்திரயான் செய்தி சேகரித்து திரும்பியபோது கேமராமேன் பலி: முதல்வர் இரங்கல் ; ரூ.5 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Chandrayan ,Naghi Narayanan ,Chandrayan 3 ,Moon ,Dinakaran ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...