×

கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனது நிலம் எனக்கூறி பட்டா கேட்டவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனது நிலம் எனக்கூறி பட்டா கேட்டவருக்கு ரூ.25,000 அபராதம் ஐகோர்ட் விதித்தது. உண்மை தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையையடுத்த பாடி திருஞானசம்பந்தர் தெருவில் வசித்து வந்த பச்சையப்பன் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பட்டா வழங்கக்கூடிய இடத்தை மாவட்ட நிர்வாகத்திற்கும் மனுவை பரிசீலிக்குப்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில், மனுதாரர் பட்ட கேட்கும் இடம் திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது எனவும் அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அறநிலையத்துறை பிறப்பித்த உதவி எதிர்த்து மனுதாரர் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இவ்வகையான தகவல்களை இந்த வழக்கில் தெரிவிக்காமல் கோவிலின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுப்பிரமணி மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் உண்மை தகவல்களை உள்நோக்கத்தோடு மறைத்து வழக்கு தொடர்ந்ததற்காக மனுதாரருக்கு ரூ.25.000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த அபராதத்தை ஆகஸ்ட் 27ம் தேத்திக்குள் திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனது நிலம் எனக்கூறி பட்டா கேட்டவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Chennai Badi ,Thiruvalleswarar Temple ,Court ,Batta ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...