×

வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

சிங்கம்புணரி, ஆக.24: சிங்கம்புணரி அருகே காளாப்பூர் ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. குஜராத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, வீட்டில் இருந்த மூன்று மோதிரங்கள், தாயத்து மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றதாக தெரிவித்தனர். கொள்ளைச் சம்பவம் குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Chinnathambi ,Kalapur Athangaraipatti ,Gujarat ,
× RELATED கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு இரண்டு வாலிபர்கள் கைது