×

விஷம் குடித்து வாலிபர் சாவு

பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது பூசலப்புரம் சின்னுகாம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த பாப்புராஜ் மகன் பாரதிராஜா (29), இவர் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஊர் அருகேயுள்ள அவர்களது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாரதிராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். வெள்ளி பொருட்கள் திருட்டு திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் வசிப்பவர் விஜயரங்கன். இவரது மனைவி சாந்தி. இவர்கள் குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டு மீண்டும் நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post விஷம் குடித்து வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : sedapatti ,pusalappuram chinnakambatti ,Bharatraja ,Papuraj ,
× RELATED காரில் ஆண் சடலம் திருமங்கலத்தில் பரபரப்பு