×

சேர்ந்து வாழ மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த டிரைவர் கைது: வத்தலக்குண்டுவில் பரபரப்பு

 

வத்தலக்குண்டு, ஆக. 23: வத்தலக்குண்டு அருகே நிலக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராமு (35). இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக ராமு, கேரளாவில் தங்கியிருந்து டிரைவர் வேலை செய்து வந்துள்ளார். விஜயலட்சுமி நிலக்கோட்டையில் கூலி வேலை செய்து வந்தார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து, கணவரை பிரிந்து வத்தலக்குண்டுவில் உள்ள தனது தாய் வீட்aடிற்கு விஜயலட்சுமி சென்று விட்டார். இந்நிலையில் கடந்த ஆக.20ம் தேதி தனது தாயாருடன் விஜயலட்சுமி, வத்தலக்குண்டுவில் கடை வீதிக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு செல்லகாந்தி நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் வந்த ராமு, விஜயலட்சுமியை தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். அதற்கு விஜயலட்சுமி, குடிக்காமல் ஒழுக்காமாக வேலைக்கு சென்று வந்தால் மட்டுமே வாழ வருவேன், இல்லையென்றால் வர மாட்டேன் எனக்கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் காயமடைந்த விஜயலட்சுமி கீழே விழுந்தார். விஜயலட்சுமி மற்றும் அவரது தாய் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதை கண்டதும் ராமு அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகில் ராமுவை கைது செய்தனர்.

The post சேர்ந்து வாழ மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த டிரைவர் கைது: வத்தலக்குண்டுவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Vatthalakundu ,Ramu ,Nilakottai Pallikoda Street ,Wattalakundu ,Vijayalakshmi ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி