- கோபி அதிரை அரிமா சங்கம்
- குருமந்தூர் அரசு பள்ளி
- ஈரோடு
- கோபி
- அதிரை
- அரிமா சங்கம்
- குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- குருமந்தூர் அரசுப் பள்ளி
- தின மலர்
ஈரோடு, ஆக.23: கோபி ஆதிரை அரிமா சங்கம் சார்பாக குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோபி ஆதிரை அரிமா சங்க செயலாளர் விஜயா ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆதிரை அரிமா சங்கத்தலைவர் கார்த்தி ஸ்ரீதர் பள்ளியின் தலைமையாசிரியர் குழந்தைவேலுவிடம் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதிரை அரிமா சங்க பொருளாளர் பவித்ரா செந்தில், முன்னாள் தலைவர் தேவி ஜெகநாதன், புனிதவதி நடராஜன், பள்ளியின் நூலக ஆசிரியர் அருணா, ஆசிரியர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post குருமந்தூர் அரசு பள்ளிக்கு புத்தகங்கள் கோபி ஆதிரை அரிமா சங்கம் வழங்கியது appeared first on Dinakaran.