சென்னை: டிடிவி தினகரன் திவாலானவர் என்பதை அறிவிக்க நோட்டீஸ் பிறப்பிக்க எந்தத் தடையும் இல்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஃபெரா சட்டத்தில் பதிவான வழக்கில் 728கோடி அபராதம் கட்டாததால் தினகரன் திவாலானவர் என ED நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து தினகரன் மேல்முறையீடு செய்துள்ளனர். அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கக் கோர முடியாது என்று தினகரன் தரப்பு கூறியுள்ளனர்.
The post டிடிவி தினகரன் திவாலானவர் என்பதை அறிவிக்க நோட்டீஸ் பிறப்பிக்க எந்தத் தடையும் இல்லை: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.