- விராலிமலை
- அரசு பள்ளி
- விராலிமலை அரசு பள்ளி
- புதுக்கோட்டை மாவட்டம்
- விராலிமலை அரசு சிறுவர்கள் மேல்நிலைப் பள்ளி
- தின மலர்
விராலிமலை, ஆக. 20: விராலிமலை அரசு பள்ளி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி பல்வேறு வியாபார கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது இக்கடைகளால் வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையூறு இருப்பதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் சுற்றுச்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளின் இரும்பு பெட்டிகளை சனிக்கிழமை கிரேன் இயந்திரம் மூலம் தூக்கிச் சென்று அகற்றினர். கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் சற்று நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
The post விராலிமலை அரசு பள்ளி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.