×

ஏழாயிரம்பண்ணையில் புகையிலை விற்ற 2 பேர் கைது

ஏழாயிரம்பண்ணை, ஆக.19: புகையிலை விற்ற பெண் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுகிறதா என கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர் விளக்கு பகுதியில் சார்பு ஆய்வாளர் இராமமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ்(80) என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் வைத்து சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல தாயில்பட்டி சக்திவேல் நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பரமேஸ்வரி என்பவரிடமும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.7000 ஆகும்.

The post ஏழாயிரம்பண்ணையில் புகையிலை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ejayarampanna ,Ejayarampannai ,Vembakkottai ,Chatur ,
× RELATED வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா