×

வீட்டை உடைத்து 30 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை: உசிலம்பட்டியில் பரபரப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் கார் மெக்கானிக் வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கார் மெக்கானிக். இவர் நேற்றிரவு அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு தனது மனைவியுடன் சென்றார். இரவில் பாட்டியின் வீட்டிலேயே இருவரும் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஆனந்தராஜ் அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் ஆனந்த்ராஜ் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டை உடைத்து 30 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டை உடைத்து 30 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை: உசிலம்பட்டியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Uzilampatti ,Uzilambatti ,
× RELATED உசிலம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க இடம் ஆய்வு