×

உசிலம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க இடம் ஆய்வு

உசிலம்பட்டி, செப். 24: உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் ஆய்வு பணியை நேற்று மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாசம் தலைமையில் உசிலம்பட்டி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்னிலையில் மேற்கொண்டனர். உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் உள்ள போத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள நிலம், சீமானூத்து ஊராட்சி மலையடிவாரத்தில் உள்ள நிலம், நக்கலப்பட்டி ஊராட்சி முத்துப்பாண்டிபட்டியில் உள்ள நிலம் உள்ளிட்ட அரசு நிலங்களை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், டிஎஸ்பி நல்லு, அரசு வழக்கறிஞர் ராஜசேகர் மறறும் வழக்கறிஞர்கள், வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

The post உசிலம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க இடம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Uzilampatti ,Uzilimbatti ,Madurai ,Uzilampatti Court ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை