×

அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

செஞ்சி, ஆக. 18: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் கன்னியப்பன் மகள் ஜனனி(16). செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் மாலை பள்ளிக்கு சென்று வீடு திரும்பியவர் பின்னர் மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அருகில் ஏரியில் உள்ள பொது கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் நேற்று காலை திருவண்ணாமலை-செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் கார்த்திகேயன் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வாத்தை நடத்தியதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

The post அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kanniyappan ,Janani ,Bharatthangal ,Chenchi ,Villupuram district ,Senchi ,
× RELATED விதை நேர்த்தி விழிப்புணர்வு