×

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோவுக்கு ராமதாஸ் பாராட்டு!

சென்னை: சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் பாகம் வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நிலவில் உந்துசக்தி கருவியிலிருந்து சந்திரயானின் தரையிறங்கும் கருவி வெற்றிகரமாக பிரிந்தது.

இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு பாராட்டுகள். ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து ஜூலை 14-ம் நாள் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான கருவி விக்ரம் லேண்டர், இன்று வெற்றிகரமாக அதை செலுத்தி வந்த உந்துசக்தி கருவியிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் நுணுக்கமான இந்த பணியை வெற்றிகரமாக சாதித்த இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி வரும் 23-ம் நாள் நிலவில் இறங்கி ஆய்வை மேற்கொள்ளும்; இதுவரை கண்டறியப்படாத நிலவு குறித்த உண்மைகளை உலகுக்கு சொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

The post சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோவுக்கு ராமதாஸ் பாராட்டு! appeared first on Dinakaran.

Tags : Vikram Lander ,Chennai ,Pamaka ,Isra ,ISRO ,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த...