பெரம்பலூர்,ஆக.17: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. 31 மனுக்கள் பெறப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமை யில் நேற்று( 16ம் தேதி) மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட எஸ்பி பொது மக்களிடம் மனுவை பெற்றார். முகாமில் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடா லூர், குன்னம், மங்கல மேடு, அரும்பாவூர், கை. களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், மாவட்ட குற்றப் பிரிவு, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையங்கள், பெரம்பலூர் மற்றும் மங்கலமேடு அனை த்து மகளிர் காவல்நிலை யங்கள் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 31 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற் கொள்ள அனுப்பி வைக்கப் பட்டது.மேலும் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனுவிசாரணை முகாம் நடைபெறும், பொது மக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் எஸ்பி அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
The post பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் appeared first on Dinakaran.