×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பிளாஸ்டிக் இல்லா கிராமத்தை உருவாக்குவோம்: கிராம சபை கூட்டத்தில் பெண்கள் உறுதிமொழி

வருசநாடு, ஆக. 17: கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தும்மக்குண்டு, முருக்கோடை, சிங்கராஜபுரம் உள்ளிட்ட 18 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, நேற்று முன்தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.வருசநாடு கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து தலைமையிலும், கடமலைக்குண்டு ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரா தங்கம் தலைமையிலும், நரியூத்து ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் தங்கபாண்டி தலைமையிலும், மயிலாடும்பாறை கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் பார்வதி அன்பில் சுந்தரபாரதம் தலைமையிலும், ராயக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் குருவம்மாள் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், பெண்கள் அனைவரும் பிளாஸ்டிக் இல்லா கிராமத்தை உருவாக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்தனர்.

The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் பிளாஸ்டிக் இல்லா கிராமத்தை உருவாக்குவோம்: கிராம சபை கூட்டத்தில் பெண்கள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Kadamalai-Mylai union ,Varusanadu ,Kadamalaikundu ,Mayiladumparai ,Tummakundu ,Murukodai ,Singarajapuram ,Kadamalai-Mylai union.… ,council ,
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?