மதுரை, ஆக. 17: மதுரை, முனிச்சாலையில் புது ராமநாதபுரம் ரோடு, சி.எம்.ஆர் ரோடு சந்திப்பில் மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜனின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திறந்து வைத்தார். இதில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, மு.பெ.சாமிநாதன், பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், வெங்கடேசன் எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த், உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், மாநில தணிக்கைகுழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன்,
தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, அவை தலைவர் ஒச்சுபாலு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம், தனசெல்வன், துணை செயலாளர்கள் மூவேந்திரன், சின்னம்மாள், ராகவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.ஆறுமுகம், முத்துகணேசன், மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராஜா, அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மணி, மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சவுந்தரராஜன், சிறுபான்மை அணி அமைப்பாளர் உஸ்மான் அலி, நெசவாளர் அணி அமைப்பாளர் வெள்ளத்துரை, பகுதி செயலர்கள் தவமணி, டி.கே.செந்தில், சுதன், காவேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post டி.எம்.சவுந்தர்ராஜன் சிலை திறப்பு விழா உற்சாகம் appeared first on Dinakaran.