×

பாசிமணி விற்பதில் தகராறு!: மாமல்லபுரம் அருகே சக நரிக்குறவ இன பெண்ணை கத்தியால் தாக்கிய புகாரில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது..!!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே சக நரிக்குறவ இன பெண்ணை கத்தியால் தாக்கிய புகாரில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய நரிக்குறவ இனத்தை சேர்ந்த பெண்மணியான அஸ்வினி, கோயிலில் அன்னதானம் சாப்பிட அனுமதிக்கவில்லை என பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். இந்த வீடியோவை பார்த்த முதல்வர், அஷ்வினி வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் அப்பெண் வியாபாரம் செய்ய மாமல்லபுரம் கடற்கரை சாலையில் ஒரு பங்க் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண் நதியா என்பவர் இன்று மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சாலையில் கடை விரித்து பாசிமணி வியாபாரம் செய்துள்ளார். இதனை கண்ட அஷ்வினி, வெளியூரில் இருந்து வந்து எப்படி வியாபாரம் செய்யலாம் என நரிக்குறவ இன பெண் நதியாவை மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் பாசி விற்பதில் ஏற்பட்ட தகராறில் நரிக்குறவ பெண் நதியாவை அஸ்வினி கத்தியால் குத்தியுள்ளார்.

அஸ்வினி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த நதியா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் கிழித்ததாக நதியா அளித்த புகாரில், மாமல்லபுரம் காவல்துறையினர் அஷ்வினியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post பாசிமணி விற்பதில் தகராறு!: மாமல்லபுரம் அருகே சக நரிக்குறவ இன பெண்ணை கத்தியால் தாக்கிய புகாரில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Narivirava ,Aswini ,Narithiruva ,Mamallapuram ,
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...