×

டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

 

வடமதுரை, ஆக. 15: வடமதுரை அருகே கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் என்ற கருப்புசாமி (27). இவர் அதே ஊரில் செங்கல் சூலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலைசொந்த வேலையாக எரியோடு சென்று விட்டு கொம்பேறி பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒத்தப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்தவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எரியோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : North Madurai ,Vadivel ,Karupusamy ,Kampliampatti ,Vadamadurai ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் அருகே வடமதுரை...