×

பாதயாத்திரை சென்றவர் பைக் மோதி படுகாயம்

 

சாத்தூர், ஆக.15: டூவீலர் மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர் காயமடைந்தார். சாத்தூர் அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் அய்யாத்துரை(45). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சாத்தூர் இருக்கன்குடி சாலையில் ஆட்டுப்பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அய்யாத்துரை பலத்த காயமடைந்தார்.

அவரை அப்பகுதியினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றானை சேர்ந்த முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post பாதயாத்திரை சென்றவர் பைக் மோதி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Ayyathurai ,Acchankulam ,Padayatra ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?