×

இன்ஜினியர் வீட்டில் 27 சவரன் கொள்ளை

கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜி நகர், திருக்குறள் சாலை, முதல் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (30). இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, 7 மாதத்திற்கு முன்பு திருமணமாகி வாணி (27). என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் கடந்த 3ம் தேதி சொந்த ஊரான விருதாச்சலத்துக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கிரில்கேட் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவின் லாக்கரில் வைத்திருந்த 25 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது. இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த பிரசாந்த், இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி குற்றவியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும், காஞ்சிபுரத்திர் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

* ரசீது வைத்திருந்த நகைக்கு மட்டுமே புகார் வாங்கிய போலீசார்
பிரசாந்த் தனது வீட்டில் 27 சவரன் நகை கொள்ளை போனது குறித்து முதலில் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். ஆனால், இதில் ரசீது உள்ள 13 சவரன் நகைக்கு மட்டுமே போலீசார் புகார் வாங்கினர். இதில், தம்பதியினருக்கு திருமணத்தின்போது உறவினர்கள் சீர்வரிசையாக கொடுத்த நகைகளுக்கு ரசீது இல்லாததால் அதற்கு தனியாக புகார் கொடுக்கும்படி பிரசாந்திடம் போலீசார் கூறி அனுப்பியுள்ளனர்.

The post இன்ஜினியர் வீட்டில் 27 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Prasanth ,MG Nagar ,Thirukkural Road ,First Street ,Panchayat ,Vandalur, Chennai ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...