×

காதலன் ஏமாற்றியதாக கூறி போதையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். தனியார் கம்பெனியில் பணியாற்றிவரும் இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் கதவை உள்பக்கமாக தாழிட்டுக்ெகாண்டு, ‘‘காதலன் என்னை ஏமாற்றிவிட்டான். நான், தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்,’’ என்று சத்தம் போட்டுள்ளார். தகவலறிந்து ஜே.ஜே.நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம், பெண் உதவி ஆய்வாளர் தேவசேனா தலைமையில் போலீசார் அங்கு வந்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து இளம்பெண்ணை மீட்டனர். அப்போது அந்த பெண் மது போதையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டில் 2 மது பாட்டில்கள் வைத்திருந்தார்.

அவரிடம் விசாரித்தபோது, ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தேன். அவர் ஏமாற்றி விட்டதால் மனவேதனையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்,’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் சமாதானப்படுத்தி, அதேபகுதியை சேர்ந்த அவரது தோழியை வரவழைத்து பாதுகாப்புக்கு தங்க வைத்தனர். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது மூத்த மகன் வீட்டுக்கு சென்ற அவரது தாய்க்கு போன் செய்து, அவரை வரவழைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post காதலன் ஏமாற்றியதாக கூறி போதையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Mukappher ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...