×

வடக்கஞ்சேரி அருகே ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை உடல் மீட்பு

 

பாலக்காடு, ஆக. 13: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே தனியாரின் ரப்பர் தோட்டத்தில் 2 வயதுடைய ஆண் சிறுத்தையின் சடலம் காணப்பட்டது. பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி மங்கலம் டேம் பாரஸ்ட் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி ஒடாம்தோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தின் அருகாமையிலுள்ள சிறியவாய்க்கால் வரப்பில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தையின் சடலம் காணப்பட்டது. வழக்கம்போல் ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போது சிறுத்தையின் சடலத்தை பார்த்துள்ளனர்.

உடனடியாக மங்கலம் டேம் பாரஸ்ட் அதிகாரிகளுக்து தகவலளித்ததைத் தொடர்ந்து மங்கலம் டேம் பாரஸ்ட் அதிகாரி ரஞ்சித் தலைமையில் வனத்துறை காவலர்கள் விரைந்து வந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டனர். சிறுத்தையின் உடல் முழுவதுமாக காயங்கள் ஏற்பட்டும், நெஞ்சு பகுதியில் பலத்த அடிப்பட்டு இறந்துள்ளது என கால்நடை மருத்துவர் டேவிட் தெரிவித்தார். இவரது தலைமையில் சிறுத்தையின் உடற்கூறு பரிசோதனைக்குப்பின் சிறுத்தையின் உடல் அடக்கம் செய்தனர். இந்த சம்பவ இடத்தை பாரஸ்ட் அதிகாரி சூர்யப்பிரகாஷ், வடக்கஞ்சேரி செக்‌ஷன் பாரஸ்ட் அதிகாரி சலீம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வடக்கஞ்சேரி அருகே ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vadakancheri ,Palakkad ,Vadakancheri, Palakkad district, Kerala ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...