×

துறைமுகம் முதல் பெசன்ட்நகர் வரை 15ம் தேதி மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை அறிவிப்பு

 

சென்னை, ஆக.13: சுதந்திரத்தையொட்டி சென்னை துறைமுகம் முதல் பெசன்ட்நகர் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக 15ம் தேதி காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் – பெசன்ட் நகர் வரை உள்ள கடலோர பகுதிகளில் கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அந்தந்த ஊர் பஞ்சாயத்து மற்றும் சங்கத்தை சேர்ந்த மீனவர்களிடம் அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post துறைமுகம் முதல் பெசன்ட்நகர் வரை 15ம் தேதி மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Besantnagar ,Fisheries department ,Chennai ,Fishery ,Chennai port ,Dinakaran ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!