×

மது குடித்த தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற நண்பன் திருவண்ணாமலை தேரடி வீதியில்

திருவண்ணாமலை, ஆக. 12: திருவண்ணாமலையில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை அவரது நண்பனே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை பே கோபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பிரேம் குமார்(30). இவர், கடந்த 4ம் தேதி மாலை திருவண்ணாமலை தேரடி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த கடலாடியை சேர்ந்த வெங்கடேசன்(30) என்பவர், பழக்கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரேம்குமாரை, போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நண்பர்களான பிரேம்குமார், வெங்கடேசன் மற்றும் சீனு ஆகியோர், ஒன்றாக மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில், இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர். இந்நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். எனவே, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேரடி வீதியில் வாலிபரை நண்பண் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மது குடித்த தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற நண்பன் திருவண்ணாமலை தேரடி வீதியில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thiruvannamalai Theradi Road, Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...