×

11 மேற்பார்வையாளர்கள் மாற்றம்

சேலம், ஆக.11: தமிழகத்தில் மேட்டூர் உள்ளிட்ட நகராட்சிகளில் பணியாற்றிய 11மேற்பார்வையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியின் பொதுப்பணி மேற்பார்வையாளர் பானுரேகா இடைப்பாடி நகராட்சிக்கும், பெரம்பலூர் நகராட்சியின் பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி ராசிபுரம் நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி பட வரைவாளர் சாதிக்அலி அறந்தாங்கி நகராட்சிக்கும், பூந்தமல்லி நகராட்சி பட வரைவாளர் கலையரசு செங்கல்பட்டு நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். திருவள்ளூர் நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாசன் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், குமாரபாளையம் நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் பூங்கொடி இலால்குடி நகராட்சிக்கும், போடிநாயக்கனூர் நகராட்சி பட வரைவாளர் கோபிநாத் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கும், சிவகங்கை நகராட்சி பொது பணி மேற்பார்வையாளர் உலகநாதன் விருத்தாசலம் நகராட்சிக்கும், கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பட வரைவாளர் மஞ்சுளாதேவி ஆற்காடு நகராட்சிக்கும், உதகமண்டலம் நகராட்சி படவரைவாளர் மதிவாணன் ஆரணி நகராட்சிக்கும், கோபி செட்டிப்பாளையம் நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரபாகரன் அரக்கோணம் நகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.

The post 11 மேற்பார்வையாளர்கள் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Mettur ,Tamil Nadu ,District ,Mettur Municipality… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி