×

பிரபல ரவுடி தாடி அய்யனார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கடலூர், ஆக. 10: கடந்த மாதம் 28ம் தேதி ரெட்டிச்சாவடி அருகே உள்ள புதுக்கடை மெயின்ரோட்டில் உள்ள மெடிக்கல் கடை எதிரே கொலை செய்யப்பட்ட அன்பரசன் என்பவரின் பெரியப்பா சேகர், அவரது மனைவி செம்மலர் ஆகியோர் நின்று கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பிரபல ரவுடி அய்யனார் என்கிற தாடி அய்யனார், செம்மலரை இடிக்கும் நோக்கில் வந்து வண்டியை நிறுத்தி, போலீசில் என்னைபற்றி தகவல் சொல்கிறீர்களா, அன்பரசன் கொலை வழக்கிற்கு சாட்சி சொல்ல கோர்ட்டிற்கு வந்தால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்று புதைத்து விடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனர்.

இவர் மீது புதுச்சேரி மாநிலம் மங்கலம், வில்லியனூர், பாகூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கும். கொலை முயற்சி வழக்கு, வழிப்பறி, ஆயுத சட்ட வழக்கு என 9 வழக்குகளும், தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் அன்பரசன் கொலை வழக்கும், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு என மொத்தம் 12 வழக்குகள் உள்ளன. மேலும் இவர் மீது புதுச்சேரி மாநிலம் மங்கலம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது.  இவரது குற்றசெய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார் அதன்பேரில் தாடி அய்யனார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

The post பிரபல ரவுடி தாடி அய்யனார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Roudy Beard Ayanar ,Cuddalore ,Pudukkadai MainRoad ,Rettichavadi ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை