×

ஊத்துக்கோட்டை அருகே வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி காயம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேரந்தவர் ராஜாமணி (40). கூலி தொழிலாளி இவரது மனைவி அனிதா(37). இவர்களுக்கு அபிநயா (19) என்ற மகளும் ராகுல் (16) என்ற மகனும் உள்ளனர். நேற்றிரவு அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணி அளவில், திடீரென அவர்களது ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் அனைவரும் சிக்கினர். இதில் ராஜாமணி லேசான காயம் அடைந்தார். அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் தப்பினர். ராஜாமணி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுபற்றி ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி காயம் appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Oothukottai ,Rajamani ,Ambedkar Nagar ,Anita ,
× RELATED ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில்...