×

மொபட்டில் இருந்த ₹2.5 லட்சம் திருட்டு

குடியாத்தம், ஆக.8: குடியாத்தம் அடுத்த மதியேட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(59), பால் வியாபாரி. இவர் குடியாத்தம்-வேலூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். நேற்று ₹2.5 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்து மொபட்டில் வைத்து கொண்டு குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள பாத்திரக்கடைக்கு சென்றுள்ளார். மொபட்டை சாலை ஓரம் நிறுத்திவிட்டு கடைக்கு சென்று மீண்டும் மொபட்டில் வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். அப்போது, பணம் இருக்கிறதா? என்று சீட்டுக்கு அடியில் பார்த்தபோது அதிலிருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மகாதேவன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மொபட்டில் இருந்த ₹2.5 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kudiyattam ,Mahadevan ,Mathietipalli ,Kudiatham-Velur road ,Dinakaran ,
× RELATED தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது குடியாத்தம் அருகே முன்விரோதம்