×

தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது குடியாத்தம் அருகே முன்விரோதம்

குடியாத்தம் மார்ச் 9: குடியாத்தம் அடுத்த ஆரிமுத்துபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பத்வாசலம்(45), இவரது அண்ணன் அருணாச்சலம்(50). கட்டிட மேஸ்திரிகளான இருவரும் அதேபகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு கடந்த சில மாதங்களாக குடும்பத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதில் இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அருணாச்சலம் அவரது தம்பி பக்தவச்சலத்தை வீட்டிலிருந்த கத்தியை கொண்டு முதுகு, கை ஆகிய பகுதிகளில் வெட்டி உள்ளார். இதில் பக்தவச்சலம் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் அருணாச்சலம் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது குடியாத்தம் அருகே முன்விரோதம் appeared first on Dinakaran.

Tags : Kudiyattam ,Patwasalam ,Arunachalam ,Arimuthupatti ,
× RELATED கோடை மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் குடியாத்தம் அருகே