×

குட்கா, கஞ்சா விற்ற 3 பேர் கைது

ஓசூர், ஆக.8:ஓசூர் அலசநத்தம் பகுதியில் ரோந்து சென்ற அட்கோ போலீசார், அங்குள்ள பெட்டி கடையில் சோதனையிட்ட போது, குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைக்காரர் குமரவேல்(68) என்பவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர். இதேபோல் மத்திகிரி போலீசார், பூனப்பள்ளி பகுதியில் கடையில் குட்கா விற்ற சேத்தன்(35) என்பவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர். ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், குருப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நரேன் பர்மன்(38) என்பதும், கஞ்சாவை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post குட்கா, கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,ADCO ,Alasanantham ,Gutka ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைனில் ₹11 லட்சம் மோசடி