ஜெட்டா: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஜெட்டாவில் நடந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருதல் தொடர்பான சில நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் பங்கேற்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரின் தொடக்கத்தில் இருந்தே, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அனைத்து சமாதான முயற்சிகளும் தொடரப்பட வேண்டும். இவ்விசயத்தில் நீடித்த மற்றும் விரிவான தீர்வைக் காண இந்தியா விரும்புகிறது. சகிப்புத்தன்மையை இந்தியா ஊக்குவிக்கிறது. அதேநேரம் மதத்துடன் இணைக்கப்படும் தீவிரவாதத்தை ஆதரிக்காது’ என்றார்.
The post ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் அஜித் தோவல் வலியுறுத்தல் appeared first on Dinakaran.