ஈரோடு, ஆக. 3: ஈரோடு அடுத்த வடமுகம் வெள்ளோடு ராக்கசாம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த தென்முக வெள்ளோடு பகுதியை சேர்ந்த கண்ணையா என்ற பெரியசாமி (60) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பிளாஸ்டிக் பேரலில் இருந்த 20 லிட்டர் சாராய ஊறல், ஏற்கனவே காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 1 லிட்டர் சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
The post சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் பறிமுதல் appeared first on Dinakaran.