×

இறப்பு சான்றிதழ் சர்ச்சை தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்க தலைமை பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இறப்பு சான்றிதழ் சர்ச்சை தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்க தலைமை பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்போரூர் நெமிலியிலுள்ள தனது சொத்துகளுக்கு ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் பட்டா தரப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சொத்துக்களை எழுதித்தந்த முத்துகிருஷ்ணன் என்பவர் 1997ல் இறந்துவிட்டதாக கே.எம்.சாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். முத்துகிருஷ்ணன் எழுதித்தந்த சொத்துக்களை தற்போது நிர்வகித்து வருவதாக கே.எம்.சாமி தரப்பில் வாதிடப்பட்டது. 1936ஆம் ஆண்டிலேயே முத்துகிருஷ்ணன் இறந்துவிட்டதாக நீதிமன்றத்தில் அறநிலையத்துறை இறப்பு சான்று தாக்கல் செய்துள்ளது. சொத்து விவகாரத்தில் தீர்வு காணும் வரை மனுதாரர் வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரக்கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் கே.எம்.சாமி தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post இறப்பு சான்றிதழ் சர்ச்சை தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்க தலைமை பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCord ,Chennai ,Igord ,Registrar ,Tirupporur ,Nemili ,iCourt ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...