×

போராட்டங்கள், வன்முறை சம்பவங்களுக்கு இடையே வாய்க்கால் வெட்டும் பணியை என்எல்சி மீண்டும் துவக்கியது: வளையமாதேவியில் போலீசார் குவிப்பு

சேத்தியாத்தோப்பு: வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் புதிய வாய்க்கால் வெட்டும் பணி நேற்று மீண்டும் துவங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், சாத்தப்பாடி, ஊ.ஆதனூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் 2011ல் விளைநிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தியது. அப்போது ஏக்கருக்கு 6 லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்து வழங்கியது. கூடுதல் இழப்பீடு, குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்த நிலையில் கடந்த 26ம் தேதி வளையமாதேவி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் வாய்க்கால் வெட்டும் பணிகளை துவக்கியது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நேற்று முன்தினம் பாமக போராட்டத்தால் வாய்க்கால் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை வளையமாதேவி பகுதியில் கரிவெட்டி கிராமம் செல்லும் பாதை அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. பின்னர், அந்த சாலைக்கு கிழக்கு பகுதியில் உள்ள நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. 10க்கும் மேற்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரங்களை கொண்டு என்எல்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post போராட்டங்கள், வன்முறை சம்பவங்களுக்கு இடையே வாய்க்கால் வெட்டும் பணியை என்எல்சி மீண்டும் துவக்கியது: வளையமாதேவியில் போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : NLC ,Brangmadevi ,Chethiyathoppu ,Brangamathevi ,NLC administration ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...