×

டூவீலர் திருட்டு வழக்கில் பாஜ நிர்வாகி கைது

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் டூவீலரை திருடி கலரை மாற்றி ஓட்டி வந்த பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், கடந்த 20ம் தேதி ஆடி அமாவாசையன்று, சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு டூவீலரில் சென்றார். செல்லும் வழியில் வாழைத்தோப்பு பகுதியில் டூவீலரை நிறுத்திவிட்டு, கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்தியிருந்த டூவீலரை காணவில்லை. இது குறித்து உதயகுமார் அளித்த புகாரின்பேரில், சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டூவீலரை தேடி வந்தனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி நகர பாஜ வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் (42), டூவீலரை திருடி, வாகனத்தின் கலர் மற்றும் நம்பர் பிளேட் ஆகியவற்றை மாற்றி ஓட்டி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து, டூவீலரை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில், ஆடி அமாவாசையன்று சதுரகிரி கோயிலுக்கு சென்ற தமிழ்ச்செல்வன், வாழைத்தோப்பில் உதயகுமார் நிறுத்தியிருந்த டூவீலரை திருடி வந்து கலர் மற்றும் நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்தியது தெரிய வந்தது. பாஜ நிர்வாகி டூவீலர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டூவீலர் திருட்டு வழக்கில் பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Uzilimbati ,Baja ,Uzilampatti ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு