×

ஊட்டி – மஞ்சூர் சாலையில் சுற்றுலா பயணிகளை கவரும் செர்ரி மலர்கள்

ஊட்டி : ஊட்டி – மஞ்சூர் சாலையில் கீழ்கைகாட்டி பகுதியில் முன்னதாக பூத்துள்ள செர்ரி மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மலர்கள் அந்த நாட்டில் வசந்த காலத்தை வரவேற்கும் மலர்களாக கருதப்படுகிறது. இந்த மலர்கள் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது. இந்த மலர்களை காண்பதற்காக பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவிலும் பல பகுதிகளில் இந்த செர்ரி மரங்கள் காணப்படுகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் இந்த செர்ரி மலர்கள் அதிகளவு காணப்படுகிறது. பெரும்பாலான தேயிலை தோட்டங்கள், சாலையோரங்களில் இந்த மலர்கள் அதிகளவு காணப்படுகிறது.ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, கீழ் கைகாட்டி, தேவர்சோலை போன்ற பகுதிகளில் இந்த மரங்கள் அதிகமாக காணப்படுகிறது. தற்போது, நீலகிரியில் குளிரான காலநிலை நிலைவும் நிலையில், இந்த மரங்களில் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட செர்ரி மலர்கள் பூத்துள்ளன.

மரமே இளஞ்சிவப்பாக காட்சியளிக்கும் நிலையில், இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த மலர்களை கண்டு ரசிப்பதுடன் இதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். பொதுவாக, இந்த மலர்கள் ஆகஸ்ட் மற்றும் ெசப்டம்பர் மாதங்களில் பூக்கும். ஆனால், இம்முறை சற்று முன்னதாவே பூத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஊட்டி – மஞ்சூர் சாலையில் சுற்றுலா பயணிகளை கவரும் செர்ரி மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Oodi ,Manjur Road ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...