×

மயிலம் அருகே துணிகரம் முனீஸ்வரன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

திண்டிவனம், ஜூலை 27: திண்டிவனம் அருகே முனீஸ்வரன் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மயிலம் அடுத்த தென்கலவாய் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் பழனி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயிலில் இருந்த உண்டியல் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார், அப்பகுதியில் விசாரணை செய்தனர்.

அப்போது கோயில் பின்புறம் உள்ள வயல்வெளியில் உண்டியல் கிடப்பது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காணிக்கை பொருட்கள் மற்றும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த போலீசார், உண்டியலை உடைத்து பணம், காணிக்கை பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மயிலம் அருகே துணிகரம் முனீஸ்வரன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Vadhakaram ,Muneeswaran temple ,Mylam ,Dindivanam ,Muneeswaran ,
× RELATED கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை